Thursday, March 3, 2011

மனிதர்களின் ரசனை

குட்டிப் பாப்பா
"அழகு" என்றும்
திருஷ்டி படப்போகுது என்றும் சொல்லி                                      
ஆளாளுக்கு
ஒரு மைப் பொட்டு வைத்து
சிரித்துக் கொண்டிருந்த 
என்னை அழவைத்து
இரசித்து பார்த்தார்கள்..

Tuesday, March 1, 2011

நடுநிசி பேய்களும் இரவும்




பேய் படம்
பார்த்துவிட்டு
உறங்கச் செல்கையில்
கதையில் வராத வேம்பு மரங்கள்
நடுநிசியில்!
பெருமூச்சு விட்டு பேசிக் கொண்டிருகின்றன..
ஜன்னல் ஓரத்தில்
பேய்களுக்கு! பதிலாக...
                            

நட்பின் பிரிவு


ஒரு சில வார்த்தைகளுடன்
முடித்துக் கொள்ளும்  
உரையாடலின் முடிவில். 
முடிவுறாமல் தொடரும்
நீண்ட 
மௌனத்தை போலவே
இன்னும் தொடருகிறது...
பிரிவின் வலி!
நம்மையறியாமலே!