Wednesday, September 28, 2011

சனிக்கிழமை



வாரத்தில் ஒரு நாள்
வழக்கமாய் தென்படும் தலைகள்
இத் தினத்தன்று காணாமல் போகக் கூடும்

மேலாடை மாற்றி கொன்று
மின்னொலிப்  பூச்சுக்குள்
வர்ண ஜாலம் காட்டும்  - என் ஒரு
கைச் சொடுக்கில்

அலுவலகப் பெட்டியாம்
என் முன்னே சமர்த்தாய்
அமர்திருக்கும்
என் ஆசை கணிபொறிப்  பெட்டி

கடனே என்று
கடமை செய்து கொன்றிருக்கும்
சில கைகள்
சிவனே என்று
சும்மா  இருக்கும்
சில ..............

எது எப்படி இருப்பினும்
சில கண்கள் தாமே என்று
முறைத்து கொன்றிருக்க
பெரும்பாலும் எல்லா காதுகளும்
கேட்டுக் கொண்டிருக்க

வாய்கள் வலிக்காமல்
உதிர்த்து கொன்றிருக்கின்றன
உயிரற்ற  வார்த்தைகளை

அந்நியப்பட்ட தினமாய்
அகப்பட்டவர்களின் வாழ்கையில்
கடந்துபோய்க் கொன்றிருகின்றன 
யார் கையிலும் சிக்காமல்!!- சபிக்கப்பட்ட
இந்த ஒரு  நாள்! 

No comments:

Post a Comment